2429. மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரிநூலன்;
                                              வேதமுதல்வன்,
பால் ஆடு மேனி கரியானும், முன்னியவர் தேட நின்ற
                                                       பரன்; ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல்
                                                         வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள, மல்கு திரு முல்லை
                                                   வாயில் இதுவே.
9
உரை