2456. ஏழை வெண் குருகு, அயலே இளம்பெடை தனது எனக்
                                                        கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு
                                                  அமர்ந்தார்தாம்,
மாழை அம் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது
                                                       அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர், வினை நலிவு இலரே.
4
உரை