2466. தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும்
                                                         புகையும்
கொண்டு கொண்டு அடி பரவி, குறிப்பு அறி முருகன்
                                                     செய் கோலம்
கண்டு கண்டு, கண் குளிரக் களி பரந்து, ஒளி மல்கு கள்
                                                            ஆர்
வண்டு பண் செயும் புகலூர் வர்த்த மானீச் சுரத்தாரே.
3
உரை