2583. புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி
                                                           சூடி,
பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல்
                                                  செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம்,
அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை
                                                    அடையாவே.
1
உரை