2584. அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி அதள்; அங்கையில்
                                                    அனல் ஏந்தி,
இரவும் ஆடுவர்; இவை இவர் சரிதைகள்! இசைவன,
                                                       பலபூதம்;
மரவம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்,
                                                       மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன்
                                                  தலைப்படுவாரே.
2
உரை