2585. குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடி
                                                           சேரக்
கணங்கள் பாடவும், கண்டவர் பரவவும், கருத்து அறிந்தவர்
                                                           மேய
மணம் கொள் பூம்பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை
                                                     அடையாவே.
3
உரை