2588. கண் உலாவிய கதிர் ஒளி முடிமிசைக் கனல் விடு சுடர்
                                                          நாகம்,
தெண் நிலாவொடு, திலகமும், நகுதலை, திகழ வைத்தவர்
                                                           மேய
மண் உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர், இவ் உலகினில்
                                                      உயர்வாரே.
6
உரை