2598. சுரும்பு சேர் சடைமுடியினன், மதியொடு துன்னிய தழல்
                                                          நாகம்,
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர்பல கொண்டு
                                               அடியவர் போற்றக்
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு
                                                     கற்பகத்தை,
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி
                                                உடையவர் தாமே.
5
உரை