2601. மடுத்த வாள் அரக்கன்(ன்) அவன் மலைதன் மேல் மதி
                                                  இலாமையில் ஓடி
எடுத்தலும், முடிதோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல்
                                                          ஊன்ற,
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட, கடிக்குளம் தனில்
                                                         மேவிக்
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம்
                                                உடையவர் தாமே.
8
உரை