2650. நம்பனார், நல் மலர்கொடு தொழுது எழும் அடியவர்
                                                   தமக்கு எல்லாம்;
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர், செல்வம்
                                                     மல்கிய நல்ல
கொம்பு அனார், தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே!
                                                என்று எழுவார்கள்
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து
                                                இனிது இருப்பாரே.
3
உரை