2657. கோணல் வெண்பிறைச் சடையனை, கோட்டூர்
                            நற்கொழுந்தினை, செழுந்திரனை,
பூணல் செய்து அடி போற்றுமின்! பொய் இலா மெய்யன்
                                                நல் அருள் என்றும்
காணல் ஒன்று இலாக் கார் அமண், தேரர்குண்டு ஆக்கர்,
                                                  சொல் கருதாதே,
பேணல் செய்து, அரனைத் தொழும் அடியவர்
                                          பெருமையைப் பெறுவாரே.
10
உரை