2661. கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும் கூந்தலின்
                                                     குலை வாரி
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்,
வாடினார் தலையில் பலி கொள்பவன், வானவர் மகிழ்ந்து
                                                        ஏத்தும்
கேடு இலாமணியைத் தொழல் அல்லது, கெழுமுதல்
                                                     அறியோமே.
3
உரை