2680. திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம்
                                          கானல் அம் திரு வாய்மூர்,
அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம்
                                                      அடி பரவி,
நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன்
                                                    தமிழ் மாலை
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி,
                                          உலகுக்கு ஓர் தவநெறியே.
11
உரை