தொடக்கம் |
2.3 திருத் தெளிச்சேரி - வினாஉரை - இந்தளம்
|
|
|
1491. |
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே? |
1 |
|
உரை
|
|
|
|
|
1492. |
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர்
ஏத்தவே,
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்!
வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய்
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே? |
2 |
|
உரை
|
|
|
|
|
1493. |
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி
தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்!
கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோ
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே? |
3 |
|
உரை
|
|
|
|
|
1494. |
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப்
பெயும்
தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!
ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே? |
4 |
|
உரை
|
|
|
|
|
1495. |
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன்
பாவிக்கும்
செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!
மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து
வௌவவே,
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே? |
5 |
|
உரை
|
|
|
|
|
1496. |
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில்
சூழ, நல்
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்!
குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே? |
6 |
|
உரை
|
|
|
|
|
1497. |
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில்
கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்!
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே? |
7 |
|
உரை
|
|
|
|
|
1498. |
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம்
சேர்
சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்!
வித்தகப் படை வல்ல அரக்கன் விறல் தலை,
பத்து, இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே? |
8 |
|
உரை
|
|
|
|
|
1499. |
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல்
சூழ்
சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!
மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே
ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே? |
9 |
|
உரை
|
|
|
|
|
1500. |
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்!
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே? |
10 |
|
உரை
|
|
|
|
|
1501. |
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி
எம் செல்வனை,
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே. |
11 |
|
உரை
|
|
|
|