தொடக்கம் |
2.14 திருவெண்ணியூர் - இந்தளம்
|
|
|
1612. |
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1613. |
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில்
நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1614. |
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை,
நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில்
இனிதனை, ஏத்துவர் ஏதம் இலாதாரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1615. |
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க்
காத்தானை, கனிந்தவரைக் கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான்தன்னை,
ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே |
4 |
|
உரை
|
|
|
|
|
1616. |
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத்
தாரானை, தையல் ஓர்பாகம் உடையானை,
சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1617. |
முத்தினை, முழுவயிரத்திரள் மாணிக்கத்
தொத்தினை, துளக்கம் இலாத விளக்குஆய
வித்தினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அத்தனை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1618. |
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப்
பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித் தோல் மெய்யில்
மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
நீந்தானை, நினைய வல்லார் வினை நில்லாவே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1619. |
மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச்
செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்
இறுத்தானை, "எழில் அமர் வெண்ணி எம்மான்!" எனப்
பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1620. |
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1621. |
குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய
மிண்டர்கள் மிண்டுஅவை கேட்டு வெகுளன்மின்!
விண்டவர்தம் புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1622. |
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்,
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை,
உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார்
பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே. |
11 |
|
உரை
|
|
|
|