தொடக்கம் |
2.24 திருநாகேச்சுரம் - இந்தளம்
|
|
|
1720. |
பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1721. |
சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில்
உற வார்கணை உய்த்தவனே! உயரும்
நறவு ஆர் பொழில் நாகேச்சுரநகருள்
அறவா! என, வல்வினை ஆசு அறுமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1722. |
கல்லால்நிழல் மேயவனே! கரும்பின்
வில்லான் எழில் வேவ, விழித்தவனே!
நல்லார் தொழும் நாகேச்சுரநகரில்
செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1723. |
நகு வான்மதியோடு அரவும் புனலும்
தகு வார்சடையின் முடியாய்! தளவம்
நகு வார் பொழில் நாகேச்சுரநகருள்
பகவா! என, வல்வினை பற்றுஅறுமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1724. |
கலைமான்மறியும் கனலும் மழுவும்
நிலைஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுரநகருள்
தலைவா! என, வல்வினைதான் அறுமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1725. |
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி,
வரையான்மகள் காண, மகிழ்ந்தவனே!
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே! என, நீங்கும், அருந்துயரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1726. |
முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில்
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே!
நடை ஆர்தரு நாகேச்சுரநகருள்
சடையா! என, வல்வினைதான் அறுமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1727. |
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற,
நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே!
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத்
தாயே! என, வல்வினைதான் அறுமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1728. |
நெடியானொடு நான்முகன் நேடல் உற,
சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே!
நடு மா வயல் நாகேச்சுரநகரே
இடமா உறைவாய்! என, இன்புஉறுமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1729. |
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம்பாவியர் கட்டுரை விட்டு, "உலகில்
நலம் பாவிய நாகேச்சுரநகருள்
சிலம்பா!" என, தீவினை தேய்ந்து அறுமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1730. |
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச்
சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே. |
11 |
|
உரை
|
|
|
|