2.26 திருநெல்வாயில் - இந்தளம்
 
1742. புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார்,
நடையின் நால்விரல்கோவணம் நயந்த
உடையினார், எமது உச்சியாரே.
1
உரை
   
1743. வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம்
தாங்கினார், தலைஆய தன்மையர்
நீங்கு நீர நெல்வாயிலார்; தொழ
ஓங்கினார், எமது உச்சியாரே.
2
உரை
   
1744. நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார், தொழ
இச்சையால் உறைவார்; எம் ஈசனார்;
கச்சை ஆவது ஓர் பாம்பினார்; கவின்
இச்சையார்; எமது உச்சியாரே.
3
உரை
   
1745. மறையினார், மழுவாளினார், மல்கு
பிறையினார், பிறையோடு இலங்கிய
நிறையினார் அ நெல்வாயிலார்; தொழும்
இறைவனார், எமது உச்சியாரே.
4
உரை
   
1746. விருத்தன் ஆகி வெண்நீறு பூசிய
கருத்தனார், கனல் ஆட்டு உகந்தவர்,
நிருத்தனார் அ நெல்வாயில் மேவிய
ஒருத்தனார், எமது உச்சியாரே.
5
உரை
   
1747. காரின் ஆர் கொன்றைக்கண்ணியார், மல்கு
பேரினார், பிறையோடு இலங்கிய
நீரினார் அ நெல்வாயிலார்; தொழும்
ஏரினார், எமது உச்சியாரே.
6
உரை
   
1748. ஆதியார், அந்தம் ஆயினார், வினை
கோதியார், மதில் கூட்டுஅழித்தவர்,
நீதியார் அ நெல்வாயிலார்; மறை
ஓதியார், எமது உச்சியாரே.
7
உரை
   
1749. பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார், ஒருகால்விரல் உற,
நெற்றி ஆர நெல்வாயிலார்; தொழும்
பெற்றியார், எமது உச்சியாரே.
8
உரை
   
1750. நாடினார் மணிவண்ணன், நான்முகன்,
கூடினார் குறுகாத கொள்கையா
நீடினார் அ நெல்வாயிலார்; தலை
ஓடினார், எமது உச்சியாரே.
9
உரை
   
1751. குண்டுஅமண், துவர்க்கூறை மூடர், சொல்
பண்டம் ஆக வையாத பண்பினர்
விண் தயங்கு நெல்வாயிலார்; நஞ்சை
உண்ட கண்டர், எம் உச்சியாரே.
10
உரை
   
1752. நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை,
பண் பயன்கொளப் பாட வல்லவர்,
விண் பயன்கொளும் வேட்கையாளரே.
11
உரை