தொடக்கம் |
2.27 திருஇந்திரநீலப்பருப்பதம் - இந்தளம்
|
|
|
1753. |
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1754. |
குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு
அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர்
இறைவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்தனை ஓதி உய்ம்மினே! |
2 |
|
உரை
|
|
|
|
|
1755. |
என் பொன்! என் மணி! என்ன ஏத்துவார்
நம்பன், நால்மறை பாடு நாவினான்,
இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே! |
3 |
|
உரை
|
|
|
|
|
1756. |
நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்;
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம்
ஈசன், இந்திரநீலப்பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும், குணம் அது ஆகவே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1757. |
மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்,
இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே! |
5 |
|
உரை
|
|
|
|
|
1758. |
வெண்நிலாமதி சூடும் வேணியன்,
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்,
அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1759. |
கொடி கொள் ஏற்றினர்,
கூற்று உதைத்தவர்,
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்,
அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர், உகந்த கொள்கையே! |
7 |
|
உரை
|
|
|
|
|
1760. |
எடுத்த வல் அரக்கன் கரம்புயம்
அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட்
படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற, முயலும், இன்பமே! |
8 |
|
உரை
|
|
|
|
|
1761. |
பூவினானொடு மாலும் போற்றுஉறும்
தேவன் இந்திர நீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரைத் தம் வினை
கோவியா வரும்; கொல்லும், கூற்றமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1762. |
கட்டர்குண்டு அமண், தேரர், சீர் இலர்,
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம்,
எள் தனை நினையாதது என்கொலோ,
சிட்டுஅதுஆய் உறை ஆதி சீர்களே? |
10 |
|
உரை
|
|
|
|
|
1763. |
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்,
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தம் இலியை ஏத்து ஞானசம்
பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே! |
11 |
|
உரை
|
|
|
|