தொடக்கம் |
2.36 திருஇரும்பூனை - வினா உரை - இந்தளம்
|
|
|
1852. |
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே? |
1 |
|
உரை
|
|
|
|
|
1853. |
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள்
சொல்லீர்
குழல் ஆர் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி,
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகான் இடை ஆடு கருத்தே? |
2 |
|
உரை
|
|
|
|
|
1854. |
அன்பால் அடி கைதொழுவீர்! அறிவீரே
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி,
இன்புஆய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
பொன் போல் சடையில் புனல் வைத்த பொரு |
3 |
|
உரை
|
|
|
|
|
1855. |
நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி,
இச்சித்து, இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே? |
4 |
|
உரை
|
|
|
|
|
1856. |
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்! இது சொல்லீர்
நல் தாழ்குழல் நங்கையொடும் உடன் ஆகி,
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
புற்று ஆடு அரவோடு பூண்ட பொரு |
5 |
|
உரை
|
|
|
|
|
1857. |
தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்!
சொல்லீர்
சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி,
ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே? |
6 |
|
உரை
|
|
|
|
|
1858. |
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர்! இது
சொல்லீர்
பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியஆறே? |
8 |
|
உரை
|
|
|
|
|
1859. |
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்!
சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன் ஆகி,
இயல்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே? |
9 |
|
உரை
|
|
|
|
|
1860. |
துணை நல்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள்!
சொல்லீர்
பணைமென்முலைப் பார்ப்பதியோடு உடன் ஆகி,
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே? |
10 |
|
உரை
|
|
|
|
|
1861. |
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே. |
11 |
|
உரை
|
|
|
|