தொடக்கம் |
2.44 திருஆமாத்தூர் - சீகாமரம்
|
|
|
1939. |
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே? |
1 |
|
உரை
|
|
|
|
|
1940. |
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி,
வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
"அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்!" என்று ஏத்தாதார் பேயரின் பேயரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1941. |
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன்,
விண்டது ஓர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1942. |
கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை
மாதராள
பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே |
4 |
|
உரை
|
|
|
|
|
1943. |
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண்
தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே? |
5 |
|
உரை
|
|
|
|
|
1944. |
சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்
காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான்,
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1945. |
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே |
7 |
|
உரை
|
|
|
|
|
1946. |
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே |
8 |
|
உரை
|
|
|
|
|
1947. |
புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே? |
9 |
|
உரை
|
|
|
|
|
1948. |
பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ
சார,
கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே? |
10 |
|
உரை
|
|
|
|
|
1949. |
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே. |
11 |
|
உரை
|
|
|
|