2.48 திருவெண்காடு - சீகாமரம்
 
1982. கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
1
உரை
   
1983. பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம்
                                                             நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள
                                                             நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம்,
                                                 தீவினையே.
2
உரை
   
1984. மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம்
                                                             பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா
                                                 விரும்பினனே.
3
உரை
   
1985. விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்
                                                 தண்புறவில்,
மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,
தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
4
உரை
   
1986. வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன்
                                                             தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.
5
உரை
   
1987. தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும்
                                                  வெண்காடே.
6
உரை
   
1988. சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம்
                                                             பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை
                                                             துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை
                                                 இறையவனே.
7
உரை
   
1989. பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான்
                                                  உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும்
                                                  வெண்காடே.
8
உரை
   
1990. கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும்,
                                         உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான்                                                              என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.
9
உரை
   
1991. போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிரிமின்! அறிவு உடையீர்! இது
                                                             கேண்மின்;
"வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான்"
                                                             என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!
10
உரை
   
1992. தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை
                                               வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை
                                                 வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப்                                                  புகுவாரே.
11
உரை