தொடக்கம் |
2.56 திருஇடை மருதூர் - காந்தாரம்
|
|
|
2070. |
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2071. |
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித்
திருக்கண் நிகழ்வித்தீர்!
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்!
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில்,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2072. |
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம்
அவை பாட,
சுழல் மல்கும் ஆடலீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
எழில் மல்கும் நால் மறையோர் முறையால் ஏத்த,
இடைமருதில்,
பொழில் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2073. |
பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு
ஆடலீர்!
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர்! விடை ஆர் கொடியினீர்!
எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த, இடைமருதில்,
செல்வாய கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2074. |
வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர்,
வந்து ஈண்டி
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த,
திருந்திய நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில்,
பொருந்திய கோயிலே கோயில் ஆகப் புக்கீரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2075. |
சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு
பூசினீர்!
வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்!
இலம் மல்கு நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில்,
புலம் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2076. |
புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்!
பொலிவு
ஆர்ந்த
சினம் மல்கு மால்விடையீர்! செய்யீர்! கரிய கண்டத்தீர்!
இனம் மல்கு நால்மறையோர் ஏத்தும் சீர் கொள்
இடைமருதில்,
கனம் மல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2077. |
சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று
எரித்தீர்!
திறல்
அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல் பாகத்தீர்!
இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த
இடைமருதில்,
நலம் மொய்த்த கோயிலே கோயில் ஆக நயந்தீரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2078. |
மறை மல்கு நான்முகனும், மாலும் அறியா வண்ணத்தீர்!
கறை மல்கு கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினீர்!
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை
இடைமருதில்,
நிறை மல்கு கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2079. |
சின் போர்வைச் சாக்கியரும், மாசு சேரும்
சமணரும்,
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே,
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள்
இடைமருதில்,
அன்பு ஆய கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2080.
|
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான், நல் தமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே. |
11 |
|
உரை
|
|
|
|