தொடக்கம் |
2.57 திருநல்லூர் - காந்தாரம்
|
|
|
2081. |
பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு
சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2082. |
அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும்
கொள்கையீர்!
சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு
நல்லூர்,
மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
|
2 |
|
உரை
|
|
|
|
|
2083. |
குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை
தாழ,
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்!
சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்,
மறை நவின்ற கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2084. |
கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும்
கொள்கையீர்!
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு
நல்லூர்,
வான் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2085. |
நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி,
நெறிகுழலாள
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்!
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி, திரு நல்லூர்,
மணம் கமழும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2086 |
கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை
தாழ,
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேர் மருவு நெடுவீத்க் கொடிகள்
ஆடும் திரு நல்லூர்,
ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.
|
6 |
|
உரை
|
|
|
|
|
2087. |
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி,
உமை காண,
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்!
தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்,
வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2088. |
காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன்
மலை
எடுப்ப,
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு
உகந்தீர்!
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்,
மாது அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2089. |
போதின் மேல் அயன், திருமால், போற்றி
உம்மைக்
காணாது
"நாதனே இவன்" என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்!
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்,
மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2090. |
பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர்
ஒன்று
அல்லாதார் அற உரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா
நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர்,
மல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2091. |
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை
மேவு
&குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு
நல்லூர்,
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல்
சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே. |
11 |
|
உரை
|
|
|
|