தொடக்கம் |
2.75 சீகாழி - காந்தாரம்
|
|
|
2280. |
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2281. |
வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2282. |
சுற்றல் ஆம் நல் புலித்தோல் அசைத்து,
அயன்
வெண்தலைத்
துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள
மல் தயங்கு திரள்தோள் எம் மைந்தன் அவன் அல்லனே! |
3 |
|
உரை
|
|
|
|
|
2283. |
பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடை
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர் வண்ணனே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2284. |
தூ நயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப்
போய்,
நா நயம் கொள் மறை ஓதி, மாது ஒருபாகமா,
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2285. |
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே,
மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன்
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள
பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2286. |
முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர்
தொழ,
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும்,
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள
கொடி இலங்கும்(ம்) இடையாளொடும் குடி கொண்டதே! |
7 |
|
உரை
|
|
|
|
|
2287. |
வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன்,
தோள
கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியு
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே,
தொல் இருக்குமறை ஏத்து உகந்து உடன் வாழுமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2288. |
மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான் தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2289. |
நன்றி ஒன்றும் உணராத வன்சமண், சாக்கியர்,
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான்
கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள
வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2290. |
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே. |
11 |
|
உரை
|
|
|
|