தொடக்கம் |
2.76 திருஅகத்தியான் பள்ளி - காந்தாரம்
|
|
|
2291. |
வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2292. |
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண்
நீற்றினான்,
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2293. |
உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து
உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன் தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள் ஆகவே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2294. |
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;
பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை,
ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2295. |
போர்த்ததுவும் கரியின்(ன்) உரி; புலித்தோல்,
உடை;
கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு
ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும்(ம்) அரணம், படர் எரி மூழ்கவே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2296. |
தெரிந்ததுவும், கணை ஒன்று; முப்புரம், சென்று
உடன்
எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர் உறைவான் தலை,
அரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2297. |
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள்
ஆகி! மெய்ச்
சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2298. |
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார்
புரம்,
ஒறுத்ததுவும்; ஒளி மா மலர் உறைவான் சிரம்,
அறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2299. |
சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும்,
அரவும், மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2300. |
செந்துவர் ஆடையினாரும், வெற்று அரையே
திரி
புந்தி இலார்களும், பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி;
அந்தணன், எங்கள் பிரான், அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின்! நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2301. |
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன்,
மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே. |
11 |
|
உரை
|
|
|
|