தொடக்கம் |
2.82 திருத் தேவூர் - காந்தாரம்
|
|
|
2356. |
பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2357. |
ஓதி மண் தலத்தோர் முழுது உய்ய, வெற்பு
ஏறு
சோதி வானவன் துதிசெய, மகிழ்ந்தவன் தூ நீர்த்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர்
ஆதி; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2358. |
மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்
அறவன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2359. |
முத்தன், சில் பலிக்கு ஊர்தொறும் முறை
முறை திரியும்
பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன் அடியார்கள்
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர்
அத்தன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2360. |
பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து
அன்பால்
கூடுவார், துணைக்கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார், பொருள் ஆனவன் செறி பொழில் தேவூர்
ஆடுவான்; அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2361. |
பொங்கு பூண் முலைப் புரிகுழல் வரிவளைப்
பொருப்பின்
மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான்,
திங்கள் சூடிய தீ நிறக் கடவுள், தென் தேவூர்
அங்கணன் தனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2362. |
வன் புயத்த அத் தானவர் புரங்களை எரியத்
தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன்; சேவடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2363. |
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத் தசமுகன்
நெரிந்து
வெருவும் ஊன்றிய திருவிரல் நெகிழ்ந்து, வாள் பணித்தான்
தெருவு தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2364. |
முந்திக் கண்ணனும் நான்முகனும்(ம்) அவர்
காணா
எந்தை, திண் திறல் இருங்களிறு உரித்த எம்பெருமான்,
செந்து இனத்து இசை அறுபதம் முரல் திருத் தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2365. |
பாறு புத்தரும், தவம் அணி சமணரும், பலநாள
கூறி வைத்தது ஒர் குறியினைப் பிழை எனக் கொண்டு
தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2366. |
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு
அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன்,
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே. |
11 |
|
உரை
|
|
|
|