2.89 திருக்கொச்சைவயம் - பியந்தைக்காந்தாரம்
 
2432. அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
                                                     அமர்ந்தாரே.
1
உரை
   
2433. சுண்ணத்தர்; தோலொடு நூல் சேர் மார்பினர்; துன்னிய
                                                            பூதக்
க(ண்)ணத்தர்; வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்று ஆடுவர்
                                                        கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர், மால் எரி
                                                           ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.
2
உரை
   
2434. பாலை அன்ன வெண் நீறு பூசுவர்; பல்சடை தாழ,
மாலை ஆடுவர்; கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம் வெண் திரை கரை மிசை
                                                  விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சை வயம் அமர்ந்தாரே.
3
உரை
   
2435. கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு
                                                        அணிவர்;
பொடிகள் பூசிய மார்பின் புனைவர்; நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி, சங்கின் ஒலியொடு, கலை ஒலி,
                                                         துதைந்து,
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.
4
உரை
   
2436. ஆடல் மா மதி உடையார்; ஆயின பாரிடம் சூழ,
வாடல் வெண்தலை ஏந்தி, வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மடமஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.
5
உரை
   
2437. மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்; தொல்வரை வில் அது ஆக,
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள,
                                                        விடைமேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம்
                                                      அமர்ந்தாரே.
6
உரை
   
2438. அன்று அ(வ்) ஆல் நிழல் அமர்ந்து அற உரை
                                                 நால்வர்க்கு அருள
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது, பொருகடல்
                                                         இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சை வயம்
                                                      அமர்ந்தாரே.
8
உரை
   
2439. சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
                                                           ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
                                                பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
                                                      அமர்ந்தாரே.
9
உரை
   
2440. குண்டர், வண் துவர் ஆடை போர்த்தது ஒர்
                                              கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல; மை அணி கண்டர்,
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர்,
                                               ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாடக் கொச்சை வயம்
                                                   அமர்ந்தாரே.
10
உரை
   
2441. கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
                                                           போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே.
11
உரை