தொடக்கம் |
2.93 திருத் தெங்கூர் - பியந்தைக்காந்தாரம்
|
|
|
2475. |
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்;
விண்ணவர்
போற்ற,
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர்
புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு;
எழில் சேர்
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2476. |
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை
தீர்க்கும்,
கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு
பிறையன்;
பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல்
பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2477. |
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல்
உடை
மழுவாள
படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர்,
படர் புன்
சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு
தறுகண்
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2478. |
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர்
நெறி அருள்
பயப்பார்;
கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி
கண்டர்
வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2479. |
சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக்
காலால்
தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை
கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக
விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2480. |
தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை
வெண்பொடி
அணி சுவண்டர்;
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த,
சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற
வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2481. |
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர்
வினை கெட
நின்றார்;
முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து
இலங்க,
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்;
வெண்பொடிப்பூசி
வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2482. |
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ்
மால்வரை எடுக்க,
கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்;
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர்
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2483. |
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை
காணார்;
பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால்
ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக்
கருதும்
வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2484. |
சடம் கொள் சீவரப்போர்வைச் சாக்கியர்,
சமணர், சொல்
தவிர,
இடம் கொள் வல்வினை தீர்க்கும்; ஏத்துமின் இருமருப்பு
ஒருகைக்
கடம் கொள் மால் களிற்று உரியர், கடல் கடைந்திடக்
கனன்று எழுந்த
விடம் கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே! |
10 |
|
உரை
|
|
|
|
|
2485. |
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம்
குன்று
அமர்ந்தாரை,
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல்,
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. |
11 |
|
உரை
|
|
|
|