தொடக்கம் |
2.94 திருவாழ்கொளிபுத்தூர் - பியந்தைக்காந்தாரம்
|
|
|
2486. |
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது
உடையார்,
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்;
தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2487. |
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ
இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்
உடையார்;
பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்
உடையார்;
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2488. |
நொடி ஒர் ஆயிரம் உடையார்; நுண்ணியர்
ஆம், அவர்
நோக்கும்;
வடிவும் ஆயிரம் உடையார்; வண்ணமும் ஆயிரம்
உடையார்;
முடியும் ஆயிரம் உடையார்; மொய்குழலாளையும் உடையார்;
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2489. |
பஞ்சி நுண் துகில் அன்ன பைங்கழல் சேவடி
உடையார்;
குஞ்சி மேகலை உடையார்; கொந்து அணி வேல் வலன்
உடையார்;
அஞ்சும் வென்றவர்க்கு அணியார்; ஆனையின் ஈர் உரி
உடையார்;
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2490. |
பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்
உடையார்;
விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது
உடையார்;
அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக
உடையார்;
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2491. |
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக்கருவியும்
புறவில்
கொண்ட பூதமும் உடையார்; கோலமும் பல பல உடையார்;
கண்டு கோடலும் அரியார்; காட்சியும் அரியது; ஒர் கரந்தை
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2492. |
மான வாழ்க்கை அது உடையார்; மலைந்தவர்
மதில் பரிசு
அழித்தார்;
தான வாழ்க்கை அது உடையார்; தவத்தொடு நாம் புகழ்ந்து
ஏத்த,
ஞான வாழ்க்கை அது உடையார்; நள் இருள் மகளிர்
நின்று ஏத்த,
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூர்
உளாரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2493. |
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட
அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி, விருப்பு அவர் பலபல
உடையார்;
கேழல் வெண்பிறை அன்ன கேழ் மணிமிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2494. |
வென்றி மா மலரோனும், விரிகடல் துயின்றவர்
தானும்,
என்றும் ஏத்துகை உடையார்; இமையவர் துதி செய,
விரும்பி,
முன்றில் மா மலர் வாசம் முது மதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர்
உளாரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2495. |
மண்டை கொண்டு உழல் தேரர், மாசு உடை
மேனி
வன்சமணர்,
குண்டர், பேசிய பேச்சுக் கொள்ளன்மின்! திகழ் ஒளி நல்ல
துண்ட வெண்பிறை சூடி, சுண்ண வெண்பொடி அணிந்து,
எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2496. |
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ்
ஞானசம்பந்தன்,
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர்
உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்,
நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே. |
11 |
|
உரை
|
|
|
|