2.97 சீகாழி - திருவிராகம் - நட்டராகம்
 
2518. நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர்,
அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை
நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!
1
உரை
   
2519. பாவம் மேவும் உள்ளமோடு, பத்தி இன்றி, நித்தலும்
ஏவம் ஆன செய்து, சாவதன் முனம் இசைந்து நீர்,
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி, நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே!
2
உரை
   
2520. சோறு கூறை இன்றியே துவண்டு, தூரம் ஆய், நுமக்கு
ஏறு சுற்றம் எள்கவே, இடுக்கண் உய்ப்பதன் முனம்
ஆறும் ஓர் சடையினான், ஆதி யானை செற்றவன்,
நாறு தேன் மலர்ப்பொழில் நலம் கொள் காழி சேர்மினே!
3
உரை
   
2521. நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல, "நாளையும்
உச்சி வம்!" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர், நச்சு அரவு அரைப் பெரிய சோதி, பேணுவார்
இச்சை செய்யும் எம்பிரான், எழில் கொள் காழி சேர்மினே!
4
உரை
   
2522. கண்கள் காண்பு ஒழிந்து, மேனி கன்றி, ஒன்று அலாத
                                                          நோய்
உண்கிலாமை செய்து, நும்மை உய்த்து அழிப்பதன் முனம்
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுது செய்,
கண்கள் மூன்று உடைய, எம் கருத்தர் காழி சேர்மினே!
5
உரை
   
2523. அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து, நீர்,
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்) மினோ!
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்,
கொல்லை ஏறு அது ஏறுவான், கோலக் காழி சேர்மினே!
6
உரை
   
2524. பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லும் நீர்
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம்
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன்,
பை மிகுத்த பாம்பு அரைப் பரமர், காழி சேர்மினே!
8
உரை
   
2525. காலினோடு கைகளும் தளர்ந்து, காம்நோய்தனால்
ஏல வார்குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே!
9
உரை
   
2526. நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள்
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவ தன் முனம்
தலை பறித்த கையர், தேரர், தாம் தரிப்ப(அ)ரியவன்;
சிலை பிடித்து எயில் எய்தான்; திருந்து காழி சேர்மினே!
10
உரை
   
2527. தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை,
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்,
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.
11
உரை