தொடக்கம் |
2.98 திருத் துருத்தி - திருவிராகம் - நட்டராகம்
|
|
|
2528. |
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள்
உந்தி
வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு
காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு
வல்லமே? |
1 |
|
உரை
|
|
|
|
|
2529. |
அடுத்து அடுத்து அகத்தியோடு, வன்னி, கொன்றை,
கூவிளம்,
தொடுத்து உடன் சடைப் பெய்தாய்! துருத்தியாய்! ஓர்
காலனைக்
கடுத்து, அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம்
எடுத்து எடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில், நல்லமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2530. |
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு
செஞ்சடைச்
சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்கு காதினாய்!
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா! துருத்தி புக்கு,
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்கொ |
3 |
|
உரை
|
|
|
|
|
2531. |
கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி
இல்லை; தொண்டர்
தம்
அருத்தியால், தம்(ம்) அல்லல் சொல்லி, ஐயம் ஏற்பது
அன்றியும்,
ஒருத்திபால் பொருத்தி வைத்து, உடம்பு விட்டு யோகியாய்
இருத்தி நீ, துருத்தி புக்கு; இது என்ன மாயம் என்பதே! |
4 |
|
உரை
|
|
|
|
|
2532. |
துறக்குமா சொலப்படாய்! துருத்தியாய்!
திருந்து அடி
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து, இம்
மண்ணின்மேல்
பிறக்கும் ஆறு காட்டினாய்! பிணிப்படும் உடம்பு விட்டு
இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே? |
5
|
|
உரை
|
|
|
|
|
2533. |
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம்
குளிர்ந்த பைம்
பொழில்
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்!
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ
எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி
அல்லையே? |
6 |
|
உரை
|
|
|
|
|
2534. |
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு
ஒழிந்த சீர்
துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்!
அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல்
மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே? |
7 |
|
உரை
|
|
|
|
|
2535. |
சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன்
ஆய மன்மதன்
இடர்ப்படக் கடந்து, இடம் துருத்தி ஆக எண்ணினாய்!
கடல் படை உடைய அக் கடல் இலங்கை மன்னனை,
அடல் பட, அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே? |
8 |
|
உரை
|
|
|
|
|
2536. |
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும்,
மாலும் ஆய்,
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்;
துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி,
உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே. |
9
|
|
உரை
|
|
|
|
|
2537. |
புத்தர், தத்துவம் இலாச் சமண், உரைத்த
பொய்தனை
உத்தமம் எனக் கொளாது, உகந்து எழுந்து, வண்டு இனம்
துத்தம் நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர் பித்தனைத் தொழ, பிறப்பு அறுத்தல் பெற்றியே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2538. |
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்,
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே,
குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே. |
11 |
|
உரை
|
|
|
|