தொடக்கம் |
2.99 திருக்கோடிகா - நட்டராகம்
|
|
|
2539. |
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே! |
1 |
|
உரை
|
|
|
|
|
2540. |
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது
நீர்,
நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ!
வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம்
கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே! |
2 |
|
உரை
|
|
|
|
|
2541. |
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத்
துறந்து நீர்,
தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்!
அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே! |
3 |
|
உரை
|
|
|
|
|
2542. |
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும்
வகை
உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ!
மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக்
கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே! |
4 |
|
உரை
|
|
|
|
|
2543. |
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி
பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ!
பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான்,
கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே! |
5 |
|
உரை
|
|
|
|
|
2544. |
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல்
ஆம் எனப்
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை;
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே! |
6 |
|
உரை
|
|
|
|
|
2545. |
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று
இருந்து நீர்,
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ!
பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக்
கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே! |
7 |
|
உரை
|
|
|
|
|
2546. |
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத்
தவிர்ந்து
நீர்,
பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ!
வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே! |
8 |
|
உரை
|
|
|
|
|
2547. |
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம்
சொல்லுவன்;
செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா
வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர்,
கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே! |
9 |
|
உரை
|
|
|
|
|
2548. |
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்,
பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை;
விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும்
கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே! |
10 |
|
உரை
|
|
|
|
|
2549. |
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு
மேவிய
செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே. |
11 |
|
உரை
|
|
|
|