2.106 திருவலஞ்சுழி - நட்டராகம்
 
2616. என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல்
                                                       வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,
                                              முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.
1
உரை
   
2617. விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு
                                                        நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,
                                                     உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம்
                                                         ஆகக்
கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது
                                                 இருந்தமையாலே.
2
உரை
   
2618. திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண்
                                                    அடியாரைப்
பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம்
                                                  பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம்
                                                        தானே.
3
உரை
   
2619. கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம்
                                               முனிவர்க்கு அன்று
இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது
                                              அருள் பெருமானார்;
மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து,
                                                   அருங்கானத்து,
அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம்
                                                     அறியோமே!
4
உரை
   
2620. மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு;
                                                       ஒருபாகம்
பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்;
                                    பெருங்கடல் பவளம் போல்
வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம்
                                                           புக்க
எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி
                                                     தொழுவாரே.
5
உரை
   
2621. ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர்
இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்;
அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும்
                                                    பலிக்கு என்று
வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை
                                                     கவர்ந்தாரே!
6
உரை
   
2622. குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய
                                                     நெய்த்தானம்,
என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்;
                                    இமையவர் பணி கேட்பார்;
அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி
                                                     அரனார்பால்
சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று
                                            சேயிழை தளர்வு ஆமே.
7
உரை
   
2623. குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல
                                               வரைப் பரப்பு ஆய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள்
                                                 இருபதும் ஊன்றி,
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி
                                                     எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே.
8
உரை
   
2624. அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு
                                              அணைத் துயின்றானும்,
கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர்
                                                      தடக்கையில்
மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு
                                                        பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள்
                                                       களைவாரே.
9
உரை
   
2625. அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து
                                                  அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா
                                                             நீர்
மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய
                                                    பெருமானைப்
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு
                                                      ஒண்ணாதே.
10
உரை
   
2626. மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல்
                                                          காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய
                                                     தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர்
                                                         தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து
                                                    அடையாவே.
11
உரை