தொடக்கம் |
2.113 சீகாழி - செவ்வழி
|
|
|
2692. |
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள்(ள்), இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க(வ்) எறி வார் திரைக்
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2693. |
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான், அருந்
தொண்டர்கள்
அயல் இலங்கப் பணி செய்ய நின்ற(வ்) அடிகள்(ள்), இடம்
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே,
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2694. |
கூர்வு இலங்கும் திருசூலவேலர், குழைக் காதினர்,
மார்வு இலங்கும் புரிநூல் உகந்த(ம்) மணவாளன், ஊர்
நேர் விலங்கல்(ல்) அன திரைகள் மோத(ந்), நெடுந்
தாரைவாய்க்
கார் விலங்கல்(ல்) எனக் கலந்து ஒழுகும் கடல் காழியே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2695. |
குற்றம் இல்லார், குறைபாடு செய்வார் பழி
தீர்ப்பவர்,
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான், இடம்
மற்று நல்லார், மனத்தால் இனியார், மறை கலை எலாம்
கற்று நல்லார், பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2696. |
விருது இலங்கும் சரிதைத் தொழிலார், விரிசடையினார்,
எருது இலங்கப் பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத, பிழை கேட்டலால்,
கருது கிள்ளைக்குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2697. |
தோடு இலங்கும் குழைக் காதர், வேதர்,
சுரும்பு ஆர்
மலர்ப்
பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடம் ஆவது
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க, பெருஞ்
செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2698. |
மலை இலங்கும் சிலை ஆக வேக(ம்) மதில்
மூன்று எரித்து
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த(வ்)அடிகட்கு இடம்
இலை இலங்கும் மலர்க்கைதை கண்டல் வெறி விரவலால்,
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2699. |
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண்
இலங்கைக்
கோன்
அழுது இரங்க, சிரம் உரம் ஒடுங்க(வ்) அடர்த்து, அங்கு
அவன்
தொழுது இரங்கத் துயர் தீர்த்து, உகந்தார்க்கு இடம் ஆவது
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2700. |
பூவினானும், விரிபோதில் மல்கும் திருமகள்
தனை
மேவினானும், வியந்து ஏத்த, நீண்டு ஆர் அழல் ஆய்
நிறைந்து
ஓவி, அங்கே அவர்க்கு அருள் புரிந்த(வ்) ஒருவர்க்கு இடம்
காவி அம் கண் மடமங்கையர் சேர் கடல் காழியே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2701. |
உடை நவின்றார், உடை விட்டு உழல்வார்,
இருந் தவத்தார்
முடை நவின்ற(ம்) மொழி ஒழித்து, உகந்த(ம்) முதல்வன்(ன்)
இடம்
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர,
கடை நவின்ற(ந்) நெடுமாடம் ஓங்கும் கடல் காழியே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2702. |
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியு
உரகம் ஆரும் சடை அடிகள் தம்பால் உணர்ந்து
உறுதலால்,
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு, இசை
ஆர் தமிழ்
விரகன் சொன்ன இவை பாடி ஆட, கெடும், வினைகளே |
11 |
|
உரை
|
|
|
|