தொடக்கம் |
2.115 திருப்புகலூர் - செவ்வழி
|
|
|
2714. |
வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்)
வெறி விரவு
நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2715. |
வாழ்ந்த நாளும்(ம்), இனி வாழும் நாளும்(ம்),
இவை
அறிதிரேல்,
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதி(ல்) இகாள
போழ்ந்த திங்கள் புரிசடையினான் தன் புகலூரையே
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள்! உங்கள் துயர் தீருமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2716. |
மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்)
மலர்த்தாமரை,
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான், ஒர் பாகம்,
மதிசூடியை
அடைய வல்லார் அமருலகம் ஆளப்பெறுவார்களே |
3 |
|
உரை
|
|
|
|
|
2717. |
பூவும் நீரும் பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார்; செவித்துளைகளால்
யாவும் கேளார், அவன் பெருமை அல்லால்,
அடியார்கள்தாம்,
"ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள்" என்று உளம்
கொள்ளவே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2718. |
அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி
நடையவாய்,
பொன் அம்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம் மூன்றுமதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்,
இன்னர் என்னப் பெரிது அரியர்; ஏத்தச் சிறிது எளியரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2719. |
குலவர் ஆக; குலம் இலரும் ஆக; குணம் புகழுங்கால்,
உலகில் நல்ல கதி பெறுவரேனும், மலர் ஊறு தேன்
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்தனுள்,
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே |
6 |
|
உரை
|
|
|
|
|
2720. |
ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்),
அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர்தனக்கு ஓர் பொருள் ஆயினான்;
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு, உடைகோவணம்
பேணுமேனும், பிரான் என்பரால், எம்பெருமானையே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2721. |
உய்ய வேண்டில்(ல்) எழு, போத! நெஞ்சே!
உயர்
இலங்கைக் கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஒர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்து அருள வல்ல சிவன் மேய,
பூம்
பொய்கை சூழ்ந்த, புகலூர் புகழ, பொருள் ஆகுமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2722. |
`நேமியானும், முகம் நான்கு உடைய(ந்) நெறி
அண்ணலும்,
"ஆம் இது" என்று தகைந்து ஏத்தப் போய், ஆர் அழல்
ஆயினான்;
சாமிதாதை; சரண் ஆகும்' என்று, தலைசாய்மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே! |
9 |
|
உரை
|
|
|
|
|
2723. |
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும்,
போர்த்த கூறைப் போதி நீழலாரும், புகலூர்தனுள்
தீர்த்தம் எல்லாம் சடைக் கரந்த தேவன் திறம் கருதுங்கால்
ஓர்த்து, மெய் என்று உணராது, பாதம் தொழுது உய்ம்மினே! |
10
|
|
உரை
|
|
|
|
|
2724. |
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும்
புகலூர்தனுள்
வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை,
அந்தம் இல்லா அனல் ஆடலானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே. |
11 |
|
உரை
|
|
|
|