தொடக்கம் |
2.118 திருத் திலதைப்பதி - செவ்வழி
|
|
|
2747. |
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர்
காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2748. |
தொண்டர் மிண்டி, புகை விம்மு சாந்தும்
கமழ் துணையலும்
கொண்டு, கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன்(ன்) இடம்
தெண்திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
வண்டு கெண்டு உற்று இசை பயிலும் சோலை(ம்)
மதிமுத்தமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2749. |
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான், அடியார்
அமரர்
தொழக்
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள்(ள்), இடம்
திடல் அடங்கச் செழுங் கழனி சூழ்ந்த திலதைப்பதி,
மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2750. |
கங்கை, திங்கள், வன்னி, துன் எருக்கி(ன்)னொடு,
கூவிளம்,
வெங் கண் நாகம், விரிசடையில் வைத்த விகிர்தன்(ன்)
இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2751. |
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித்தேரினான்
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல், விரி கோங்கு, வேங்கை, சுரபுன்னைகள்,
மரவம், மவ்வல், மலரும், திலதை(ம்) மதிமுத்தமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2752. |
விண்ணர், வேதம் விரித்து ஓத வல்லார்,
ஒருபாகமும்
பெண்ணர், எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான்,
இடம்
தெண் நிலாவின்(ன்) ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி,
மண் உளார் வந்து அருள் பேணி நின்ற(ம்) மதிமுத்தமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2753. |
ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி,
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2754. |
கடுத்து வந்த கனமேனியினான், கருவரைதனை
எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது
புடைக் கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மதுப் பாய,
வாய்
மடுத்து மந்தி உகளும் திலதை(ம்) மதிமுத்தமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2755. |
படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின்
மிசை
இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும்
திலைதைப்பதி,
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2756. |
புத்தர் தேரர், பொறி இல் சமணர்களும்,
வீறு இலாப்
பித்தர் சொன்ன(ம்) மொழி கேட்கிலாத பெருமான் இடம்
பத்தர், சித்தர், பணிவு உற்று இறைஞ்சும் திலதைப்பதி,
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2757. |
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்)
மதிமுத்தர்மேல்,
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச்
சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே. |
11 |
|
உரை
|
|
|
|