தொடக்கம் |
2.121 திருப்பாதிரிப்புலியூர் - செவ்வழி
|
|
|
2780. |
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து,
நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே |
1 |
|
உரை
|
|
|
|
|
2781. |
கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து
ஆடவே,
முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம்,
புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை
உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே |
2 |
|
உரை
|
|
|
|
|
2782. |
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்,
மேல்
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப் புலியூர் உளான்,
வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து, வெறி செய்த
பின்
அருளி ஆகத்திடை வைத்ததுவும்(ம்) அழகு ஆகவே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2783. |
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்
தாம்
போதினாலே வழிபாடு செய்ய, புலியூர்தனுள்
ஆதினாலும்(ம்) அவலம்(ம்) இலாத அடிகள் மறை
ஓதி, நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு, உணப்பாலதே? |
4 |
|
உரை
|
|
|
|
|
2784. |
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான்; அழல்
ஐந்தலை
நாகம், நல்லார் பரவ(ந்), நயந்து அங்கு அரை ஆர்த்தவன்
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள்,
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2785. |
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி(ம்)
மணல் கானல்வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தை தன் பழந்தொண்டர்கள்
குதியும் கொள்வர்; விதியும் செய்வர், குழகு ஆகவே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2786. |
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்வாய்ச்
சங்கு அரவப் பறையின்(ன்) ஒலி அவை சார்ந்து எழ,
பொங்கு அரவம்(ம்) உயர் பாதிரிப்புலியூர் தனுள்
அங்கு அரவம்(ம்) அரையில்(ல்) அசைத்தானை அடைமினே! |
7
|
|
உரை
|
|
|
|
|
2787. |
வீக்கம் எழும்(ம்) இலங்கைக்கு இறை விலங்கல்(ல்)
இடை
ஊக்கம் ஒழிந்து அலற(வ்) விரல் இறை ஊன்றினான்,
பூக் கமழும் புனல், பாதிரிப்புலியூர் தனை
நோக்க, மெலிந்து அணுகா, வினை, நுணுகுங்களே |
8 |
|
உரை
|
|
|
|
|
2788. |
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி
ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள்
முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன்,
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2789. |
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத்
திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும்,
எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே! |
10 |
|
உரை
|
|
|
|
|
2790. |
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள்
சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்,
வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே. |
11 |
|
உரை
|
|
|
|