தொடக்கம் |
2.122 திருப்புகலி - செவ்வழி
|
|
|
2791. |
விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த
விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள்
தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2792. |
வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்,
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச்
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2793. |
வண்டு வாழும் குழல் மங்கை ஓர் கூறு உகந்தார்,
மதித்
துண்டம் மேவும் சுடர்த் தொல்சடையார்க்கு இடம் ஆவது
கெண்டை பாய மடுவில்(ல்), உயர் கேதகை, மாதவி,
புண்டரீகம்மலர்ப் பொய்கை நிலாவும் புகலியே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2794. |
திரியும் மூன்று புரமும்(ம்) எரித்து, திகழ்
வானவர்க்கு
அரிய பெம்மான், அரவக் குழையார்க்கு இடம் ஆவது
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால், வெயில்
புரிவு இலாத தடம் பூம்பொழில் சூழ் தண் புகலியே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2795. |
ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன்
அருள் செய்தவர்,
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ, வாளை போய்ப்
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2796. |
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், தையலாளொடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும்(ம்) இடம் ஆவது
கொக்கு, வாழை, பலவின் கொழுந் தண் கனி,
கொன்றைகள்,
புக்க வாசப்புன்னை, பொன்திரள் காட்டும் புகலியே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2797. |
தொலைவு இலாத அரக்கன்(ன்) உரத்தைத்
தொலைவித்து,
அவன்
தலையும் தோளும் நெரித்து சதுரர்க்கு இடம் ஆவது
கலையின் மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்பு
இலார்,
பொலியும் அம் தண்பொழில் சூழ்ந்து அழகு ஆரும்
புகலியே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2798. |
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல்
அன்னம் ஆய்க்
"காண்டும்" என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது
நீண்ட நாரை இரை ஆரல் வார, நிறை செறுவினில்
பூண்டு மிக்க(வ்) வயல் காட்டும் அம் தண் புகலியே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2799. |
தடுக்கு உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு,
சாக்கியர்,
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது
மடுப்பு அடுக்கும் சுருதிப்பொருள் வல்லவர், வான் உளோர்,
அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2800. |
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே. |
11 |
|
உரை
|
|
|
|