3212. |
ஆகமத்தொடு மந்திரங்க |
|
ளமைந்தசங்கத
பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
வாலவாயர னிற்கவே. 2 |
2.
பொ-ரை: வேத ஆகமங்களையும், மந்திரங்களையும்,
நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி
அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி
மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும்
அழுக்குமேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன்,
திருஆலவாய் அரன்துணை நிற்பதால்
. கு-ரை:
பங்கமா(க) (பக்கமாக) புரிந்து எனக் கூட்டுக.
சங்கதம் - சமஸ்கிருதம் என்பதன் திரிபு. பாகதம் - ப்ராகிருதம்
என்பதன் சிதைவு. (வடமொழி) வடமொழியின் திரிபு ஆகியமொழி
இரண்டாம். எப்பொழுது வந்தாய் என்ற தொடரை எப்போவந்தே
என்று பேசுவது போன்றது. பாகதத்தொடு இரைத்துரைத்த -
பிராகிருத மொழியினால் ஆரவாரித்துச் சொல்லிய.
சனங்கள் -
வைதீகமாந்தர். வெட்குறு - வெட்கமடையத்தக்க.
பங்கம் ஆ - பங்கப்படவும். வெட்குறுபக்கமாப் புரிந்து -
பாகதத்தோடு இரைத்துரைத்தல் முதலிய செயல்களைச் செய்து.
மா - பெரிய. கதம் - கோபத்தை உடைய. கரிபோல், திரிந்து -
செருக்குற்று. மாசு சேர் ஆகதர் - ஆர்கதர் என்பதன் திரிபு.
நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்தலால் மாசு சேர் என்றார்.
|