3293. மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
  ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.       6

     6. பொ-ரை: மாசில்லாத தொண்டர்கள் மலர்தூவி வணங்கிட
அவர்கள் விருப்பம் நிறைவேற அருள்நல்கும் செல்வரான சிவ
பெருமான், சினம் கொள்ளும் இடபத்தை வாகனமாகக் கொண்டு
திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவர்
வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

     கு-ரை: ஆசை ஆர - ஆசைநிரம்ப. அருள் நல்கிய
செல்வத்தர், ஆசை தீரக் கொடுப்பர், என்பதும் காண்க.