3307. |
கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண் |
|
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே. 10 |
10.
பொ-ரை: நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து
உண்ணும் புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்த வரும்
சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு
சூழ்ந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை
உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?
கு-ரை:
மீன் கவர்வார் புத்தர். அழிப்பவர் - நன்
மார்க்கங்களை யெல்லாம் அழிப்பவர்கள். தெழிக்கும் - ஒலிக்கின்ற.
பூம்புனல் - மெல்லியநீர். நல்கிடே - தெரிவித்தருள்வீராயின்.
|