4155. எண்ணா தஅரக் கனுரத் தைநெரித்துப்
  பண்ணார் தருபா டலுகந் தவர்பற்றாங்
கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே. 8

     8. பொ-ரை: தம்மை மதியாத இராவணனது வலிமையைக்
கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல்
கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும்
திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும்
சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.