2845. |
தக்கன்
வேள்வி தகர்த்தவன் பூந்தராய் |
|
மிக்க
செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன் தானே. 1 |
1, பொ-ரை:
சிவனை மதியாது தக்கன் செயத் யாகத்தைத்
தகர்த்தவனாகிய, திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த
சிறப்புடைய, இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின்
பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள். அனைத்துயிர்கட்கும்
நன்மையைச் செய்கின்ற, அனைவராலும் விரும்பப்படுகின்ற அச்சிவ
பெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான்.
கு-ரை:
தக்கன் வேள்வி தகர்த்தவனாகிய பூந்தராய் நிமலனது
பெருமை பொருந்திய திருவடிகளை என முதலிரண்டடிக்குக்
கூட்டியுரைக்க. மிக்க செம்மை - மேலான வீட்டு நெறியை அருளும்.
விமலன் - அமலன். தன்னைச்சார்ந்த உயிர்களின் மலத்தை
யொழிப்பவன் என்றும், இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன்
என்றும் பொருள்.
|