2854. |
பொருத்த
மில்சமண் சாக்கியக் பொய்கடிந் |
|
திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப் |
|
பூந்த
ராய்நகர் கோயில் கொண்டுகை |
|
ஏந்து
மான்மறி யெம்இ றையே. 10 |
10,
பொ-ரை: வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர்,
புத்தர்களின் பொய்யுரைகளை ஒதுக்கி, விண்ணோர்கள் வணங்கும்
படி வீற்றிருக்கும் கடவுள்,
திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக்
கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே
ஆவான்.
கு-ரை:
பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய்கடிந்து -
அளவை நூலுக்குப் பொருத்தமில்லாத சமணநூலும் சாக்கியநூலும்
சொல்லும்பொருளை நீக்கி. இமையோர் தொழ இருத்தல் செய்த
பிரான் - இமையோர் தொழ இருந்தபிரான். கைமான்மறி ஏந்தும் எம்
இறை - அவனே கையில் மான்மறியேந்தும் எம் இறை. கைஏந்தும்
மான் மறி எந்தை - இலாத வெண் கோவணத்தான் என்பதுபோல
நின்றது.
|