2880. நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர்
       போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு
     வேறியும்
காதலர் தண்கட வூரினா னுங்கலந்
     தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர
     னல்லனே.                           3.

     3. பொ-ரை: எல்லா உலகங்கட்கும் தலைவனும், மகாசங்கார
காலத்தில் நடனம் புரிபவனும், அடியவர்களின் இதயத்தாமரையில்
வீற்றிருப்பவனும், புலித்தோலாடை உடையவனும், இடபவாகனனும்,
அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு
பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச்
சய்த வீரட்டானத்து அரன் அல்லனோ?

     கு-ரை:நளிர்போதின் கண் பாதனும்-அடியார்களின் குளிர்ந்த
தாமரை(இருதய) மலரின்கண் தங்கும் திருவடியையுடையவனும்,
காதலர்-அன்பர்கள் வசிக்கும். தண்-குளிர்ச்சி பொருந்திய,
கடவூரினானும்-திருக் கடவூரில் எழுந்தருளியிருப்பவனும்.