2911. |
விண்டவர்
தம்புர மூன்றெரித் துவிடை |
|
யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந்
தானிடம்
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற்
கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன
வாயிலே.
2 |
2.
பொ-ரை: பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும்
எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி,
வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து,
இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாவது, தாழையும், புலிநகக்
கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும், தாமரைகள்
மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில்
ஆகும்.
கு-ரை:
பின்னிரண்டடிக்கு - பெருங் கடற்கரைச் சோலையில்
தாழையும். புலிநகக் கொன்றையும் நிலைக்கப்பெற்று, தாமரை
மலர்களையுடைய பாய்கயல் சூழப்படப் புனவாயிலே மங்கையொடும்
மகிழ்ந்தானிடமாவது.
|