2959. |
மண்ணவர்
விண்ணவர் வணங்க வைகலும் |
|
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே. 6
|
6.
பொ-ரை: மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும்,
மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை
வழிபட்டுப் போற்றுகின்றனர். வானளாவிய சோலைகளையுடைய
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்
பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம்
இல்லை.
கு-ரை:
மண்ணவரும் விண்ணவரும், ஏனை விண்ணவரும்
தம் பொருட்டு எம்மிறையை வணங்குகின்றனர். அவர்கள்
திருவெண்காடு மேவிய அண்ணலைக் கடிது வணங்கிப் பிறவியறுக்க
அறிகிலர் என்பது இப்பாடலிற் குறித்த பொருளாகும். அது
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் என்னம் திருவாசக
(தி.8 பா.20)த்தின் கருத்தாகும்.
|