2968.
|
பாவண
மேவுசொன் மாலை யிற்பல |
|
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங்
கொண்டெமை யாள்வ ராயினும்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே. 4 |
4.
பொ-ரை: யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத்
தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன்
நவிலுமாறு செய்தவர்
இறைவர். அவர் உயிர்களாகிய எங்களை
அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவண ஆடை உடையவர்.
அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
பாவ(ண்)ணம்-பாட்டின் இலக்கணம் (யாப்பு).
மேவு-பொருந்திய. சொல் மாலையில் பல-சொல்லைத் தொடுக்கும்
மாலைபோன்ற பாடல்களிற் பலவற்றை. நாவணம்-நாவிற்குப்
பொருந்து விதமாக. கொள்கையின்-விதிப்படி. நவின்ற-பாடிய.
ஆவணம் கொண்டு-அடிமை ஓலை எழுதி. எமை ஆள்வர்
-எங்களையாட்கொள்பவர். ஆயினும், கோவணங்
கொள்கையர்-கோவணம் உடையாகக் கொள்பவர். அத்தகையர்
அடியோங்களுக்கு யாது தரற்பாலர் என்பது குறிப்பெச்சம்.
|