2991. |
விடமடை மிற்றினர் வேத நாவினர் |
|
மடமொழி
மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக்கோயிலே. 5 |
5.
பொ-ரை: இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை
அடைத்து வைத்துள்ள கண்டத்தினர். வேதங்களை ஓதும் நாவினர்.
அவர், இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், இள அன்னப்பறவைகள்
நடைபயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில்
நிலவும் மாடக்கோயில் ஆகும்.
கு-ரை:
விடம் அடைமிடற்றினர்-விடந்தங்கிய கழுத்தை
யுடையவர். வேதம் நாவினர்-வேதத்தைப்பாடும் நாவினை யுடையவர்.
மடம்மொழி- குதலைச் சொல்லையுடைய. மலைமகள். மட அனம்
- இளம் அன்னப் பறவைகள். நடைபயில் - மாதர் நடையைப்
பழகுகின்ற. நிலவிய - விளங்குகின்ற, மாடக்கோயில - துங்கர்
தங்குமிடம்.
|