3033. |
ஊனில்
உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் |
|
ஞான விளக்கினை
யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே. 3 |
3.
பொ-ரை: உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச்
சக்தியை ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும்
வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப்
போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன
திருவைந்தெழுத்தேயாகும்.
கு-ரை:
ஊன் உடம்பு. உயிர்ப்பு - மூச்சு. நன்புலம் - நல்ல
அறிவு. நிட்டைகூடி இருப்போருக்கு அந்நிட்டை கலையவரும் யோக
சமாதியில் வாசனாமலம் முதலிய இடர்களைக் கெடுப்பதும் திரு
ஐந்தெழுத்தேயாம் என்க. பிறவித்துயராகிய வெப்பத்துக்குக்
குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். அங்ஙனம் விளங்கிய
ஞானத்தான் ஞேயத்தைக் கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு,
அப்பொருள் பயக்கும் திருவஞ்செழுத்து, அவ்விதிப்படி அறிந்து
கணிக்கப்படும். (சிவஞானபோத மாபாடியம். சூ.9.)
|